சென்னை:'மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:சென்னையிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவ மழை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், எத்தகைய பேரழிவை ஏற்படுத்துமோ என, அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றுள்ளது. மக்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் இது நிம்மதியை அளித்துள்ளது.
சென்னையிலும், பிற பகுதிகளிலும் தொடர்ந்து பெய்த மழை, பெரும்பான்மையான குடும்பங்களுக்கு, வாழ் வாதார இழப்புகளையும், உடைமை இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறைந்தது, 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE