புதுடில்லி:'ஹிந்து மதத்தை வெறுப்பதும், விமர்சிப்பதும், காங்கிரசுக்கு பிறவி நோயாகிவிட்டது' என பா.ஜ., கூறியுள்ளது.
பா.ஜ, செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது:காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஹிந்து மதத்தையும், நாட்டின் கலாசாரத்தையும் விமர்சிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்து மதத்தையும், நாட்டையும், ராகுலின் குடும்பத்தினர் விமர்சிப்பது புதிதல்ல.ராகுல் குடும்பத்தினர் மட்டுமல்ல அக்கட்சியின் தலைவர்கள் சிதம்பரம், சசி தரூர் உட்பட பலரும் ஹிந்து மதத்தை விமர்சித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது சல்மான் குர்ஷித் இணைந்துள்ளார்.காங்கிரஸ் தலைமையின் குடும்பத்தை திருப்திபடுத்தி பலன் அடையவே ஹிந்து மதத்தை அக்கட்சி தலைவர்கள் இழிவுப்படுத்துகின்றனர்.ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை உமிழ்வதும், கடுமையாக விமர்சிப்பதும் காங்கிரசுக்கு பிறவி நோயாகி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE