காஞ்சிபுரம் : தேசிய அளவில் நடந்த யோகா போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 11 மாணவ - மாணவியர் வெண்கலம், வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தேசிய யோகாசன விளையாட்டு அமைப்பு சார்பில் பலர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த அமைப்பில் பயிற்சி பெற்ற 15 மாணவ - மாணவியர், சென்னையில் நடந்த மாநில அளவிலான யோகாசன போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.அவர்கள்
இம்மாதம், 11 - 13ம் தேதி வரை ஒடிசாவில் நடந்த தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்றனர்.இப்போட்டியில், தமிழகத்தில் இருந்து, 39 பேர் பங்கேற்றனர். அவர்களில் 15 பேர் காஞ்சிபுரத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர்.இதில், சர்வேஸ், தேவேஷ், தர்ஷினி, ஓவியா, தேஜஸ்வினி, சிவானி ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர்.
யுவஸ்ரீ, சிவானி, யுவலட்சுமி, பிரகதீஸ்வரி, தேஜஸ்வினி ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற 11 பேர், இந்திய இளைஞர் விளையாட்டு மேம்பாட்டு நல துறை சார்பில், மார்ச் மாதம், ஹரியானாவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE