வால்பாறை:வால்பாறையில், எட்டாவது கட்டமாக நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாமில்,1,905 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.வால்பாறை மலைப்பகுதியில், சுகாதாரத்துறை சார்பில், வால்பாறை நகர், முடீஸ், சோலையாறுநகர், சின்கோனா, வாட்டர்பால்ஸ், அட்டகட்டி, கவர்க்கல், ரொட்டிக்கடை உள்ளிட்ட, 18 மையங்களில் நேற்று எட்டாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் தலைமையில், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.வால்பாறை மலைப்பகுதியில் எட்டாவது கட்டமாக நடந்த தடுப்பூசி முகாமில், 1,905 பேருக்கு ஊசி செலுத்தப்பட்டது. இது வரை,48,793 பேர் வால்பாறையில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.முதல் மற்றும் இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்துபவர்கள் எல்லா நாட்களிலும் அந்தந்த பகுதி சுகாதார நிலையங்களில் செலுத்தி கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE