சிவகாசி : தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெற்குதெரு பகுதியில் சாக்கடை துார்வாரப்பட்டு, தெருவில் கொட்டப்பட்டிருந்த கருவேல மரக்கழிவுகள் அகற்றப்பட்டது.
சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெற்கு தெரு, நடுத்தெரு பகுதியில் சாக்கடை துார்வாரப்படாமல் இருந்தது. மேலும் தெருவிலே சீமைக் கருவேல மரங்களில் முள் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதனால் டூவீலர் கூட செல்ல வழியின்றி பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதே பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். இது குறித்து தினமலர் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் லலிதா மணி உத்தரவுபடி அம்மன் கோவில்பட்டி தெற்கு தெரு பகுதியில் சாக்கடை துார்வாரப்பட்டது. சீமைக் கருவேலமரங்களின் கழிவுகள் அகற்றப்பட்டது. இதனால் போக்குவரத்து எளிதானது. மின் துறையினரும் சேதமடைந்த மின்கம்பத்தில் சிமெண்ட் பூசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE