திருவொற்றியூர் முதியவரை தாக்கி பணம் பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 62. இவர், எண்ணுார் விரைவு சாலை, மஸ்தான் கோவில் சந்திப்பிலுள்ள பழைய இரும்பு கடையில் வேலை பார்க்கிறார்.நேற்று முன்தினம் மாலை கடைக்கு வந்த மர்ம நபர், இவரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ராமகிருஷ்ணன் பணம் தர மறுக்கவே, கையால் பலமாக தாக்கி, 2,000 ரூபாய் பணத்தை பறித்து தப்பினார்.இது குறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், நேற்று காலை, சம்பவத்தில் தொடர்புடைய திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி, 26, என்பவரை கைது செய்தனர்.சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது அடிதடி வழக்கு உட்பட, நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக்குப் பின், குப்புசாமி சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE