கரூர்: அரவக்குறிச்சி நகருக்குள் கனரக வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதிகளில் தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. சரக்கு லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது, காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்கின்றன. சில இடங்களில் நின்று, மாணவ, மாணவியரை இறக்கி விட்டு செல்கின்றனர். அந்த நேரத்தில், லாரிகள் ஊருக்குள் அதிகளவில் வந்து செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. மேலும் சாலையில் செல்பவர்களை பற்றி கவலைப்படாமல் லாரிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே, 'புறவழிச்சாலைகள் இருக்கும் போது, சரக்கு வாகனங்களை அரவக்குறிச்சிக்குள் வந்து செல்ல தடைவிதிக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE