திருப்பூர்: மாநில பள்ளிக்கல்வி ஆணையர் ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, அரசு பள்ளிகளின் தரத்தினை ஆய்வு செய்யும் பொருட்டு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பள்ளிகளை பார்வையிட்டு வருகின்றனர்.தமிழகத்தில் அதிக மாணவியர் படிக்கும் பள்ளியாக, திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி திகழ்வதை தொடர்ந்து மாநில பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன் ஆகியோர், இப்பள்ளியில் நேற்று ஆய்வு செய்தனர்.பள்ளி வகுப்பறை, ஹைடெக் ஆய்வகம், துவக்கப்பள்ளி பிரிவு, விளையாட்டு மைதானம், கழிவறைகள் உட்பட அனைத்தையும் பார்வையிட்டனர்.பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தனர். ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். மாவட்ட கலெக்டர் வினீத், கல்வித்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE