சிவகாசி : சிவகாசி ரிசர்வ்லைன் முத்துராமலிங்கபுரம் நகர் சந்தனமாரியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேக விழா நடந்தது. மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளை நிறுவன தலைவர் லட்சுமிநாரயணன் தலைமை வகித்தார். செயலாளர் பிரவின் முன்னிலை வகித்தார்.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகசாலை பூஜை, விக்னேஷ்வர பூஜை என பல்வேறு பூஜைகள் நடந்தது. கோயில் கோபுரம், பரிவார தெய்வங்களின் கோபுர கலசம், மூலவர் கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய துணை த்தலைவர் விவேகன்ராஜ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, பலராம், தெய்வம், சுப்பிரமணி, நகர செயலாளார் பொன்சக்திவேல் கலந்து கொண்டனர். மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE