ஓசூர்: தளி அடுத்த தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத், 36, கார் டிரைவர்; இவரது மனைவி அனிதா, 28. குடும்ப பிரச்னையில் கடந்த, 10 மாதங்களுக்கு முன், கணவரை பிரிந்து தனியாக சென்று விட்டார். இந்நிலையில், ஓசூர் - தளி சாலையில், நேற்று முன்தினம் முகத்தில் வெட்டு காயங்களுடன் மஞ்சநாத் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மனைவி அனிதாவிடம் விசாரணை நடத்த, அவரது மொபைல்போனை போலீசார் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. விசாரணையில், நேற்றுதான் அவரது மொபைல் போன் சுவிட்ச்ஆப் ஆனது தெரிந்தது. அதனால், அத்திப்பள்ளியிலுள்ள அவரது தாய் வீட்டிற்கு போலீசார் நேரில் சென்றனர். ஆனால், அனிதா அங்கு இல்லை. இதனால் கொலைக்கும், அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது. அவரை பிடிக்க, தளி போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்திலும், தேடும் பணி நடந்து வருகிறது. அனிதா பிடிபட்ட பின்புதான், கொலைக்கும், அவருக்கும் தொடர்பு உள்ளதா, அப்படி இருந்தால், கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என, தளி போலீசார் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE