சாத்துார்- -''நகர் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெறுவது உறுதி,''என கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கூறினார்.சாத்துாரில் நகர் உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அ.தி.மு.க., அரசு திட்டங்களை மக்களிடம் திண்ணை பிரசாரம் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும். மக்கள் நம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர், என்றார்.நகர செயலாளர் இளங்கோவன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் முனிஸ்வரன், முன்னாள் கவுன்சிலர்கள் முகம்மது ரபீக், கே.பி.மணி, வீரலட்சுமி, மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வழக்கறிஞர் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE