சென்னை : தமிழகத்தில் கடந்தாண்டை ஒப்பிடுகையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரண்டு மடங்குஅதிகரித்துள்ளது. தற்போது வரை, 4,262 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் மழை காலங்களில் கொசுவால் ஏற்படக்கூடிய நோய் பாதிப்புகள் குறித்த புள்ளி விபரங்களை, மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ளது. அதில், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் ஏற்படக்கூடிய நோய்கள் அதிகரித்துள்ளன.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்கிய அக்டோபரில் மட்டும், 813 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக தேனியில் 358 பேர்; மதுரையில் 239 பேர்;சென்னையில் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தாண்டில் இதுவரை 4,262 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்; உயிரிழப்பு இல்லை. கடந்தாண்டில் 2,410 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன் வாயிலாக, கடந்தாண்டை விட டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்தாண்டு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதேபோல, மலேரியா காய்ச்சலால் 690 பேர்; சிக்குன் குனியாவால் 93 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தாண்டு 12 பேர் வெறிநாய் கடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE