கோவை: கோவையில் தற்கொலை செய்துக்கொண்ட பிளஸ் 1 மாணவியின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட 41 யூடியூப் சேனல்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு குறித்து வெளியான தகவலை மறுத்த போலீசார், தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த, 17 வயது மாணவிக்கு பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததால், அப்பள்ளியில் இருந்து விலகி, வேறு பள்ளியில் சேர்ந்தார். இந்நிலையில் மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை கைது செய்தனர்.

இந்நிலையில், மாணவியின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதனை அப்போது போலீஸ் அதிகாரிகள் மறுத்தனர். இந்நிலையில், மாணவியின் புகைப்படம் உள்ளிட்ட விபரங்களை வெளியிட்ட 41 யூடியூப் சேனல்கள் மீது கோவை மாநகர போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு குறித்து மறுப்பு தெரிவித்த போலீசார் இப்போது அவர்களே வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE