கோவை: கோரிக்கைக்கு செவிசாய்த்து, 'டாக்டர்ஸ் கார்பஸ் பண்ட்' அமைத்து அரசாணை வெளியிட்டதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் டாக்டர் ரவிசங்கர் கூறியதாவது:எங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் 'டாக்டர்ஸ் கார்பஸ் பண்ட்' அமைத்து உத்தரவிட்டிருந்தார். இதன்படி, கடினமான சூழலில் , ஓய்வு ஒழிச்சலின்றி பணிபுரிந்து கொண்டிருக்கும் அரசு மருத்துவர்கள், தங்கள் பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும்.தற்போது இந்தத் தொகையை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளனர்.அரசு மருத்துவர்களின் ஊதியத்தில் இருந்து மாதம் 500 ரூபாய் இதற்கான தொகையாக, கருவூலம் வாயிலாக பிடித்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம். இதையும் அரசு ஏற்றுக்கொண்டு, அரசாணை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாதவகையில், முன்மாதிரித்திட்டமாக, 'டாக்டர்ஸ் கார்பஸ் பண்ட்' அமைத்துக் கொடுத்த முதல்வர், மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE