பெங்களூரு : தேசிய அளவில், கர்நாடகாவில் பெண் தொழில்முனைவருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு தொழில் நகரங்கள் அமைக்கப்பட உள்ளதாக பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி அறிவித்தார்.
பெங்களூரில், பெண் தொழில்முனைவோருக்கான தனியார் நிகழ்ச்சி ஒன்றை மாநில பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தேசிய அளவில் கர்நாடகாவில்தான் பெண் தொழில்முனைவோருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொழில்நகரங்கள் அமைக்கப்பட உள்ளன. கர்நாடகாவின் மைசூரு, தார்வாட், கலபுரகி, ஹரோஹள்ளி உள்ளிட்ட பெண்களுக்கான தொழில்நகரமாக உருவாக்கப்பட உள்ளது. பெண் தொழில்முனைவோர் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளமாக இருப்பதோடு, பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கும் வாய்ப்புள்ளது. பல துறைகளில் பெண் தொழில்முனைவோர் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, பெண்கள் சாதிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்க தான் இந்த தொழில் நகரம்.இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE