புதுடில்லி: சமீபத்தில் அனைத்து மாநில கவர்னர்களின் மாநாடு டில்லியில் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில், பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தமிழக கவர்னர் ரவி, மாநாட்டு இடைவேளையில் சீனியர் அமைச்சர்களான அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திஉள்ளார்.

தமிழக ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் சிலரின் நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அடிக்கடி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் ஆஜராகி வருகின்றனர். இந்த விசாரணை குறித்து கவர்னர், மூத்த அமைச்சர்களிடம் விவாதித்துஉள்ளதால், தமிழக ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கலக்கம் அடைந்துஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE