திண்டுக்கல்-திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பெற்றோர்கள் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்ப தலைமையாசிரி யர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று குறைந்து வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். அவர்களுக்கு சாதாரண காய்ச்சல் அறிகுறியா அல்லது கொரோனா அறிகுறியா என தெரியாத சூழலில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் வகுப்பு வாரியாக மாணவர்களின் எண்ணிக்கை, தடுப்பூசி செலுத்தாத பெற்றோர்களின் விபரங்களை சேகரித்து அனுப்பவும் தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, அந்த விபரங்களை சுகாதாரத்துறையினருக்கு அனுப்பி அவர்கள் மூலமாக பெற்றோர்களை தடுப்பூசி செலுத்த வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE