சென்னை : விபத்தில் உயிரிழந்தவரின் தாய்க்கு, 19.12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுாரைச் சேர்ந்தவர் சக்திவேல், 26; கார் வர்த்தகர். இவர், 2018, ஜனவரியில் சத்திரத்திலிருந்து, உத்திரமேரூருக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த, டாடா ஏஸ் வாகனம், சக்திவேல் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.மகன் இறப்புக்கு, 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சக்திவேலின் தாய் முனியம்மாள், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஆர்.வேல்ராஜ் முன் நடந்தது. விசாரணையில் மனுதாரர் இறப்புக்கு, டாடா ஏஸ் வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, 19.12 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், ராயல் சுந்தரம் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE