அரை டிராயருடன் வங்கிக்கு போகலாமா? சமூக வலைதளத்தில் காரசார விவாதம்

Updated : நவ 22, 2021 | Added : நவ 22, 2021 | கருத்துகள் (28) | |
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒருவர், அரை டிராயருடன் சென்றதால் வங்கிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, சமூக வலைதளத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.அதில், பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றுக்கு அரை டிராயருடன் சென்றபோது, தன்னை
 அரை டிராயருடன் வங்கிக்கு போகலாமா? சமூக வலைதளத்தில் காரசார விவாதம்

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒருவர், அரை டிராயருடன் சென்றதால் வங்கிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, சமூக வலைதளத்தில் காரசார விவாதம் நடந்து வருகிறது.



மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவர், சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.அதில், பாரத ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றுக்கு அரை டிராயருடன் சென்றபோது, தன்னை உள்ளே விட வங்கி ஊழியர்கள் மறுத்ததாக கூறியுள்ளார்.



'வாடிக்கையாளர்கள் கண்ணியமான உடையுடன் வர வேண்டும் என்கின்றனர். வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடை கட்டுப்பாடு ஏதும் உள்ளதா' என, அவர் கேள்வி எழுப்பியிருந்தார். அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டிருந்தனர். அதே நேரத்தில் அரை டிராயருடன் சென்றதைக் கண்டித்தும் பலர் பதிவிட்டிருந்தனர்.



latest tamil news

'எந்த உடைக் கட்டுப்பாடும் இல்லை. அதே நேரத்தில் உள்ளூர் சூழ்நிலைக்கேற்ற ஆடை அணிந்து செல்வது நல்லது' என, வங்கி தரப்பில் இருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'வங்கி அதிகாரிகள் வீட்டுக்கு நேரில் வந்து விளக்கினர். சமரசம் ஏற்பட்டதால் என் புகாரை முடித்துக் கொள்கிறேன்' என, ஆஷிஷ் மற்றொரு பதிவை வெளியிட்டார்.



அதற்கு ஒருவர், 'ஏன் வங்கியில் இருந்து பேன்ட் வாங்கி தந்தனரா' என, கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, 'ஆமாம்' என, ஆஷிஷ் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
26-நவ-202112:13:42 IST Report Abuse
Krishnamurthy Venkatesan நாம் கண்ணியமாக வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வேஷ்டி அணிந்திருந்தாலும்கூட நமது பிள்ளைகள் (இருபாலரும்) அரைகுறை ஆடைகளில்தான் வருகிறார்கள். மேலை நாடுகளில் (மிக குளிர் உள்ள) மக்கள் summer காலங்களில் இத்தகைய ஆடைகள் அணிகிறார்கள். அங்கெல்லாம் வெயில் காலங்கள் குறைவு. நமது குழந்தைகளுக்கு எடுத்து சொன்னால் விதண்டாவாதம் செய்கிறார்கள். நமது அரசாங்கம் சில கடினமான சட்டங்களை அமல் படுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Siva Santhanam - Pune,இந்தியா
22-நவ-202118:57:39 IST Report Abuse
Siva Santhanam இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆண்களைப்பற்றித்தான். இரு தரப்பு வாதங்களையும் ஒத்து கொள்கிறோம். அதே நேரம் இந்த வாதங்களை இரு தரப்புக்கும் பொதுவில் ஏன் வைக்கவில்லை? லெக்கின்ஸ், கிழித்து விட்ட ஜீன்ஸ், ஜட்டி சைஸ் இல் ஒரு டிரஸ், முண்டாசு பனியன் மேலாடை இவற்றைப் போட்டுக்கொண்டு ஆடை சுதந்திரம் என்ற வளைவுகளையும் வண்ணங்களையம் காட்டி மமதையில் அனைத்து பொது இடங்களிலும் சுற்றி திரியும் கும்பல்களுக்கு என்ன கன்ட்ரோல் ? கேட்டால் ஆடை சுதந்திரம் எங்கள் அடிப்படை உரிமை என்று கோரும் "இந்திய அரசியலமைப்பின் நிபுணர்கள்" கொலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு காலம் கண்டிப்பாக வரவே வேண்டும்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
23-நவ-202104:19:51 IST Report Abuse
meenakshisundaramஇதுலே ஏன் பெண்களை பற்றி கூறவே மாட்டேன்றாங்க ?அநேகமா எல்லா நகரங்களிலும் முழு பேண்ட் அணிந்து செல்லும் ஆண்களுடன் அரை ட்ரையர் அணிந்து செல்லும் பெண்கள் அதுவும் கடும் குளிர்காலத்திலும் தெருக்களில் பார்க்கிறோமே...
Rate this:
Cancel
NATARAJAN R - bangalore,இந்தியா
22-நவ-202117:33:53 IST Report Abuse
NATARAJAN R வங்கியின் நடவடிக்கை சரியானது. சுதந்திரம் என்பது எல்லைக்குட்பட்டது. பணிக்கு செல்லும்போது டிராயர் போட்டுக் கொண்டு செல்வாரா? வங்கியில் மட்டுமல்ல பலர் ஆலயங்களுக்கு அரை டிராயருடன் போகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது அரை டிராயர் என்பது இரவில் வீட்டில் உபயோகப்படுத்த வேண்டிய உடை. இது போன்ற அரை டிராயர் போட்டுக் கொண்டு கவலைப்படாமல் ரோட்டில் தெரிவது, அவரையே அவர் கேவலப்படுத்தி கொள்வது. இந்திய நாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள் தயவு செய்து வெளியில் வரும்போது அரை டிராயர் போட்டுக் கொண்டு வராதீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் வசதியாக இருக்கலாம் எங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது வங்கியில் ஏதேனும் விதிமுறை உள்ளதா என்று கேட்ட புத்திசாலியே எல்லாவற்றுக்கும் விதிமுறை தரமுடியாது அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு வேண்டும். என்னுடைய கேள்வி இந்த மேதைகள் எல்லாம் ஏன் பணிக்கு செல்லும்போது அரை டிராயருடன் செல்வதில்லை? .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X