சென்னை: தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரி டிசம்பர் 3ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. மேலும், மத்திய அரசு டீசலுக்கு 10 ரூபாயும், பெட்ரோலுக்கு 5 ரூபாயும் குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது.

தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூபாய் 100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி இன்று (நவ.,22) முதல் டிசம்பர் 03 வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கான இந்த போராட்டங்களுக்கு தமிழக மக்கள் நல்ஆதரவை தந்து, தாங்களும் அறப்போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE