கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே எட்டிமங்கலத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்வள அட்டையின்படி உரமிடுவதற்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் உதவி இயக்குனர் மதுரைசாமி வரவேற்றார். இணை இயக்குனர் விவேகானந்தன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ''அதிகமாக, தேவையில்லாமல் யூரியா இடுவதால் பூச்சி நோய் தாக்குதல் ஏற்படும். மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிட வேண்டும்,'' என்றார்.வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் பேராசிரியர் கிருஷ்ணகுமார், வேளாண் துணை இயக்குனர்கள் சுப்பராஜ், அமுதன், சரவணன், துணை இயக்குனர் லட்சுமிபிரபா, வேளாண்மை அலுவலர்கள்ஜோஸ்பின், ஜெயந்தி உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சேகரன், உதவி வேளாண் அலுவலர் பாலசுப்பிரமணியன் செய்தனர். துணை வேளாண் அலுவலர் தனசேகரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE