ராமநாதபுரம் : வீட்டிற்குள் கேமரா பொருத்தி மிரட்டல் விடுப்பவரை கைது செய்ய வலியுறுத்தி கீழக்கரையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவருடன் வந்து எஸ்.பி., கார்த்திக்கிடம் புகார் அளித்தார்.
அவரது மனுவில் கூறியிருப்பது:கணவரின் நண்பர் என்ற முறையில் வீட்டிற்கு வந்து சென்ற கீழக்கரையை சேர்ந்த முகைதீன் ராசிக் அலியிடம் என் குடும்பத்தினர் பழகி வந்தோம். ஒரு நாள் கணவர் இல்லாத நேரம் வீட்டிற்கு வந்தார். அவருக்கு டீ கொடுப்பதற்காக சமையல் அறைக்கு நான் சென்ற போது, எனது படுக்கை அறைக்குள்கேமரா பொருத்த முயன்றதை பார்த்து கண்டித்தேன்.கணவரிடம் தெரிவித்தேன்.
கணவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது எதுவும் சொல்லாமல் துண்டித்தார்.கீழக்கரை டி.எஸ்.பி.,யிடம் அளித்த புகாரின்பேரில், கீழக்கரை போலீசார் பெண்களுக்கு எதிரான கொடுமை சட்டத்தில் அவர் மீது வழக்கு பதிந்தனர்.வெளிநாடு சென்றவர் அங்கிருந்தபடி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவரை கைது செய்யவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE