புதுக்கோட்டை :மாணவியை கர்ப்பமாக்கியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே, கங்காணிபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35; கூலி தொழிலாளியான இவருக்கு, இரண்டு மனைவியர்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவரை, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார்.
இது குறித்த புகாரில், கீரனுார் அனைத்து மகளிர் போலீசார், 2020 மார்ச் 7ல் 'போக்சோ' சட்டத்தில் ராஜ்குமாரை கைது செய்தனர். புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிபதி சத்தியா விசாரித்தார்.மாணவியை கர்ப்பமாக்கிய ராஜ்குமாருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
மேலும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததற்கு 10 ஆண்டுகள் சிறை; 20 ஆயிரம் ரூபாய் அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்கு இரண்டு ஆண்டுகள் சிறை; 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். சிறுமிக்கு 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.சிறுமிக்கு, 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE