சீக்கியர்களுக்கு வேறு யாரும் செய்யாத அளவு அதிக நன்மை செய்தவர் மோடி: ஜே.பி.நட்டா

Updated : நவ 23, 2021 | Added : நவ 23, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
கான்பூர்: ‛‛சீக்கியர்களுக்கு வேறு யாரும் செய்யாத அளவு அதிக நன்மை செய்தவர் மோடி,'' என்று, அகில இந்திய பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காங்கிரஸ், பா.ஜ., சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கி விட்டன. உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரமான கான்பூரில்
சீக்கியர்களுக்கு வேறு யாரும் செய்யாத அளவு அதிக நன்மை செய்தவர் மோடி: ஜே.பி.நட்டா

கான்பூர்: ‛‛சீக்கியர்களுக்கு வேறு யாரும் செய்யாத அளவு அதிக நன்மை செய்தவர் மோடி,'' என்று, அகில இந்திய பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.



உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காங்கிரஸ், பா.ஜ., சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை துவங்கி விட்டன. உத்தரபிரதேசத்தின் முக்கிய நகரமான கான்பூரில் பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பாபா நம்தேவ் குருதுவாராவுக்கு வருகை தந்தனர்.



latest tamil news

அப்போது பேசிய ஜே.பி.நட்டா பிரதமர் மோடி சீக்கிய சகோதரர்களுக்கு செய்த நன்மைகள் இதுவரை யாரும் செய்யாதது என்றுள்ளார். மேலும், தான் சமூக சேவையை தொடர்ந்து மேற்கொள்ள பாபா நம்தேவின் ஆசியைப் பெற வந்திருப்பதாகத் தெரிவித்தார்.



மராத்தி, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரான பாபா நம்தேவ் குறித்து பெருமிதம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கோரக்பூர் நகருக்கு செல்ல ஜே.பி.நட்டா திட்டமிட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளில் 312 தொகுதியை பா.ஜ., கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.



சமாஜ்வாடி கட்சி 47 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் 19 தொகுதிகளும், காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளையும் பிடித்திருந்தன. இந்நிலையில் மீண்டும் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி அமைக்க தற்போது யோகி ஆதித்யநாத் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

Samathuvan - chennai,இந்தியா
23-நவ-202123:53:48 IST Report Abuse
Samathuvan It's Really amazing that BJP is canvassing each and every corner that they are the God father of this nation. But, they should keep in their mind, we all Indians don't want to allow your FAKE PURANAS TO ENTER INTO OUR LIFE TO RESUME OUR STONE AGE.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
23-நவ-202123:48:28 IST Report Abuse
m.viswanathan அவங்க அப்பா வீட்டிலிருந்து கொண்டு வந்து நன்மை செய்தார்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-நவ-202119:52:10 IST Report Abuse
sankaseshan If you have shortage of money you can take loan from banks.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X