சென்னை:விபத்தில் இறந்த மாணவரின் பெற்றோருக்கு, 20.11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மேலப்புத்தேரியைச் சேர்ந்தவர் கணபதி சுப்ரமணியம், 20; இன்ஜினியரிங் மாணவர். இவர், 2017 மார்ச்சில், பழைய மாமல்லபுரம் சாலையில், பைக்கில் பின்புறம் அமர்ந்து பயணித்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கணபதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மகன் இறப்புக்கு இழப்பீடு கோரி, கணபதியின் பெற்றோர் சிந்து மற்றும் வைத்தீஸ்வரன், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி ஆர்.வேல்ராஜ் விசாரித்தார். இதில், கணபதி இறப்புக்கு காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.எனவே, 'மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 20.11 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE