கரூர்: கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை அடையாளம் காண முடியாமல், தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர்.
கரூரை சேர்ந்த, 17 வயதுடைய பள்ளி மாணவி கடந்த, 19ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அந்த மாணவி எழுதிய கடிதத்தில், 'பாலியல் தொந்தரவால் சாகும் கடைசி பெண், நானாக தான் இருக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார். பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் பெயரை மாணவி குறிப்பிடவில்லை. சைபர் க்ரைம் கூடுதல் எஸ்.பி., கீதாஞ்சலி தலைமையில், குளித்தலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி உள்ளிட்ட, ஆறு தனிப்படை போலீசார் குற்றவாளியை அடையாளம் காணும் வகையில் அமைக்கப்பட்டனர். பள்ளி மற்றும் மாணவி வசித்த வீடு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து விசாரித்தனர். மேலும், மாணவிக்கு வந்த போன் கால்கள், எஸ்.எம்.எஸ்., ஆகியவற்றையும், சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர். ஆனால், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை அடையாளம் காண முடியாமல், தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவி தற்கொலை வழக்கை முதலில் விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கம்யூ., கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில், கரூர் நகரம் முழுவதும் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE