கோவை:காளப்பட்டியில் நடந்த தேசிய அளவிலான 'ரேங்கிங் டென்னிஸ்' போட்டியின் சிறுவர் பிரிவில் ஜெய்சரண், சிறுமியர் பிரிவில் தக் ஷனா இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.தேசிய அளவிலான, 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி, காளப்பட்டி ரோட்டில் உள்ள 'லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப்பில்' நடந்தது.இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, 50கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.சிறுவர்களுக்கான இறுதிப்போட்டியில், ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய ஜெய் சரண், தன்னை எதிர்த்து விளையாடிய நிரஞ்ஜேஸ்வராவிற்கு வாய்ப்பு கொடுக்காமல், 6--2, 6--2 என்ற செட் கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.சிறுமியருக்கான இறுதிப்போட்டியில், தக்ஷனா தன்னை எதிர்த்து விளையாடிய ஸ்ரீரஞ்சனியை, 6--2, 6--3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தார்.இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தேசிய தரவரிசை புள்ளிகள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE