கோவில்பாளையம்:புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் காணாமல் போன சிறுமியை போலீசார் மீட்டனர்.கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவரின், 13 வயது மகள் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந் நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாலை, 6:30 மணிக்கு கோவில்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகார் அளித்தனர்.அந்த சிறுமி சொந்த ஊரான தர்மபுரிக்கு செல்வதை விசாரணையில் கண்டறிந்தனர்.சிறுமி மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய நண்பரிடம் விசாரித்ததில், கருமத்தம்பட்டி அருகே அரசு பஸ்சில் சிறுமி சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கருமத்தம்பட்டி நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து போலீசார் அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்த சிறுமியை மீட்டு, கோவில்பாளையம் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.புகார் செய்த இரண்டு மணி நேரத்தில் சிறுமியை மீட்டதற்காக போலீசாருக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE