பெங்களூரு:''அரசியலில் யாரும் சன்னியாசிகள் இல்லை. காலியாக பதவிகளை, மற்றவருக்கு கொடுப்பதில் தவறென்ன. சரியான நேரம் வரும் போது பார்க்கலாம்,'' என முதல்வரின் அரசியல் செயலர் ரேணுகாச்சார்யா தெரிவித்தார்.
பெங்களூரு விதான்சவுதாவில், அவர் கூறியதாவது:அமைச்சரவை விரிவாக்கத்துக்காக, நாங்கள் யாரும் காத்திருக்கவில்லை. எங்கள் வாயை யாரும் 'பசை' போட்டு ஒட்டவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, பா.ஜ.,மேலிடமும், முதல்வரும் முடிவு செய்ய வேண்டும்.
அரசியலில் யாரும் சன்னியாசிகள் இல்லை. காலியாக பதவிகளை, மற்றவருக்கு கொடுப்பதில் தவறென்ன. சரியான நேரம் வரும் போது பார்க்கலாம்.காங்கிரசார், நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் நாட்டை கொள்ளையடித்தது அவர்கள் தான். இதற்கு, மெத்தை, தலையணை ஊழல் நல்ல உதாரணம்.நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். எங்கள் அரசில் எந்த ஊழலும் இல்லை. வெளிப்படையாக ஆட்சி நடத்துகிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE