மடத்துக்குளம்: மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:மடத்துக்குளம் நால் ரோட்டில் செயல்பட்ட சுகாதார நிலையம், 2015ல், தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்குப்பின், 51 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தினசரி 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.நகரப்பகுதி மற்றும் அருகிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். தரம் உயர்த்தப்பட்டும் இங்கு முழுமையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தவில்லை. போதுமான அளவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை.இது தவிர ஜெனரேட்டர் வசதி இல்லாததால் மின் தடை ஏற்படும் போது, மருத்துவமனை இருளில் மூழ்குகிறது. உணவு தயாரிக்க சமையல் கூடம் வசதி இல்லை. மருத்துவமனைக்கு தனியாக ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. இதனால், நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.இது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து, முழுமையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE