கோவை: கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட, பா.ஜ., தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.சித்தாபுதூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்து, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரித்து, கட்சி நிர்வாகிகள் பலர் ஆர்வத்துடன் மனு அளித்து வருகின்றனர். நேற்று பலர் தாமரை பூவுடன் வந்து விருப்பமனு கொடுத்தனர்.கவுண்டம்பாளையம், 17வது வார்டு மாநில இளைஞர் அணி செயலாளர் பிரீத்தி லட்சுமி, பெரியகடை வீதி, 81வது வார்டு பா.ஜ., மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சபரி கிரீஸ் ஆகியோர், மாவட்ட தலைவர் நந்தகுமாரிடம் மனு அளித்தனர்.பா.ஜ., மாவட்ட தலைவர் நந்தகுமார் கூறுகையில், ''கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. தொண்டர்கள், கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலர் விருப்பமனு அளித்து வருகின்றனர். இதுவரை, 100 வார்டுகளுக்கும், 500 க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, மனுக்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE