குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்கு...அச்சுறுத்தல்!  அரசியல் சாசன நிகழ்ச்சியில் மோடி பேச்சு

Updated : நவ 28, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி : ''நம் நாட்டில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன; இது நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள், அவர்களது குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன. ஒரே குடும்பத்தினர் மட்டும் தொடர்ந்து அதிகாரத்தை அனுபவிப்பது நல்லதல்ல,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளான நவம்பர் 26ம் தேதியை
குடும்ப அரசியலால் ஜனநாயகத்துக்கு...அச்சுறுத்தல்!   அரசியல் சாசன நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புதுடில்லி : ''நம் நாட்டில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன; இது நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள், அவர்களது குடும்பத்திற்காக மட்டுமே செயல்படுகின்றன. ஒரே குடும்பத்தினர் மட்டும் தொடர்ந்து அதிகாரத்தை அனுபவிப்பது நல்லதல்ல,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளான நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு சட்ட நாளாக, 2015லிருந்து மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.இதையொட்டி பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை வகித்தார். இதில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., - எம்.பி.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
சுயநலம் இல்லை

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பலமான ஆலோசனைக்கு பின் உருவாக்கிய தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நாளாக அரசியலமைப்பு தினம் உள்ளது. இந்த நாளில் நாம் பார்லிமென்டை வணங்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மஹாத்மா காந்தி, நேதாஜி, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்கள் அனைவருக்கும் என் வணக்கம். நம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியோருக்கு நாடு தான் பிரதானமாக இருந்தது. அவர்களிடம் சிறிதும் சுயநலம் இல்லை.

நம் அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல பெரும் பாரம்பரியம், பன்முகத்தன்மை உடைய நம் நாட்டை ஒருங்கிணைக்கும் சக்தியாகவும் உள்ளது.நாட்டின் குடியரசு தினத்தை ௧௯௫௦ முதல் ஜனவரி ௨௬ல் கொண்டாடி வருகிறோம். அதுபோல, அப்போதே நவம்பர் 26ம் தேதியை அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடி இருக்க வேண்டும்.

ஆனால் சிலர் அதை செய்யவில்லை. நாம் செய்வது சரியா அல்லது இல்லையா என்பதை மதிப்பிட இந்த நாளை கொண்டாட வேண்டும். அரசியல் சாசனம் என்ற பெயரில் நமக்கு மிகப்பெரிய பரிசை அம்பேத்கர் வழங்கி உள்ளார். ஜனநாயக நாட்டில் அரசியல் குழுக்கள் மிகவும் முக்கியம்.
நம் நாட்டில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. வாரிசு அரசியல் நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அத்தகைய கட்சிகள் அவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்திற்காகவும் மட்டுமே செயல்படுகின்றன.கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் ஒரே குடும்பத்திடம் இருந்தால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஒரே குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தை ஏகபோகமாக அனுபவிக்கக் கூடாது.உட்கட்சி ஜனநாயகத்தை மதிக்காத கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை எப்படி பாதுகாக்கும். திறமைகள் அடிப்படையில் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். வாரிசு அரசியல் செய்யும் சில கட்சிகள் தங்கள் மதிப்பீடுகளை இழந்து விட்டன.


உரிமை பாதுகாக்கப்படும்



அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் செய்து தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது. ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டும், காணாமல் இருப்பது நம் இளைஞர்களை பெரிதும் பாதிக்கிறது.
ஊழல் சங்கிலியை உடைக்க வேண்டும். ஊழல் செய்தோரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.மக்கள் தங்கள் உரிமைகளை பற்றி இப்போது அதிகம் பேசுகின்றனர். மக்கள் தங்கள் கடமைகளை புரிந்து கொண்டால் அவர்களது உரிமை பாதுகாக்கப்படும். நம் அரசியலமைப்பை எதிர்கால தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நல்ல நாளில் தான், நம்மால் மறக்க முடியாத துக்க சம்பவமும் நடந்தது. ௨௦௦௮ நவம்பர் ௨௬ல், பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய கொடூர தாக்குதலை யாரால் மறக்க முடியும்?பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டு தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


சபாநாயகர் மறுப்பு



காங்கிரஸ் குற்றச்சாட்டுக்களை மறுத்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது:அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாட முடிவெடுத்து, அதற்கான ஏற்பாட்டை செய்தது பார்லிமென்ட் தான். இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை. அதை முதலில் எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்கும் இதுபோன்ற பொதுவான எந்த ஒரு நிகழ்ச்சியையும் புறக்கணிப்பது மரபல்ல. எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்ததில் எனக்கு வருத்தம் தான்.ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் மேடையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


காலனி ஆதிக்க மனப்பான்மை



உச்ச நீதிமன்றம் சார்பில் நேற்று நடந்த அரசியலமைப்பு சாசன தின விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:உலகில் காலனி ஆட்சிக்காலம் முடிந்துவிட்டாலும், காலனி ஆதிக்க மனப்பான்மை மட்டும் இன்னும் மறையவில்லை. வளரும் நாடுகளின் வளர்ச்சிக்கு இந்த காலனி ஆதிக்க மனப்பான்மை உடைய சக்திகள் பெரும் தடையை ஏற்படுத்துகின்றன.
தட்பவெப்பம் மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்தி வரும் நாடு இந்தியா மட்டுமே. எனினும் சுற்றுச்சூழல் என்ற பெயரில் இந்தியாவுக்கு பல சக்திகள் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன. நம் நாட்டில் சிலருக்கு காலனி ஆதிக்க மனப்பான்மை இருப்பது துரதிருஷ்டவசமானது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வளர்ச்சிக்கு தடைகளை ஏற்படுத்தும் செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு மோடி பேசினார்.


14 கட்சிகள் புறக்கணிப்பு



பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடந்த அரசியலமைப்பு சட்ட தின விழாவை காங்கிரஸ், தி.மு.க,, உட்பட ௧௪ கட்சிகள் புறக்கணித்தன.இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியதாவது:மத்திய பா.ஜ., அரசு சர்வாதிகாரமாக செயல்படுகிறது. பார்லிமென்டை மதிக்காமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பார்லிமென்ட் ஜனநாயகம் மோடி ஆட்சியில் கேள்விகுறியாகியுள்ளது. அரசியல் சட்டத்தை பா.ஜ., மதிக்கவில்லை; இதை கண்டித்து தான் பார்லிமென்டில் நடந்த அரசியல் சாசன தின விழாவில் நாங்கள் பங்கேற்கவில்லை.
சுதந்திர போராட்டத்தில் பா.ஜ.,வுக்கு சிறிதும் பங்கில்லை. வாரிசு அரசியல் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்து என, மோடி கூறுவது வேடிக்கை. ஜனநாயகமும், அரசியல் சட்டமும் ஆபத்தில் இருந்திருந்தால் மோடி பிரதமராகியிருக்க முடியாது. ௨௦௧௪ல் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்பட்டதால் தான் மோடியால் பிரதமராக முடிந்தது.இவ்வாறு அவர் கூறினார்.


காங்கிரஸ் குற்றச்சாட்டு



லோக்சபா காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியாவது:அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த கொண்டாட்டம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமென்பதும் முக்கியம். இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசுவதற்கு அனைத்து தரப்புக்கும் உரிமையும், அனுமதியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு முக்கிய கட்சிகளுக்கும், அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு அனுமதி தரப்படவில்லை.அரசு தரப்பைச் சேர்ந்த நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே பேசுவதற்கு பெயர் அரசியலமைப்பு சட்ட தினம் அல்ல. அவ்வாறு நடந்தால், அது அரசு நிகழ்ச்சியே அல்ல; அது குறிப்பிட்ட கட்சியின் நிகழ்ச்சியாகவே கருதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

RandharGuy - Kolkatta,இந்தியா
27-நவ-202123:28:45 IST Report Abuse
RandharGuy வாரிசு அரசியலைப் பற்றி வாடீநுகிழியப் பேசும் பிரதமர் மோடி மற்றும் நட்டா ஆகியோரின் பா.ஜ.கவின் வாரிசு அரசியல் இதோ ஆர்.எஸ்.எஸ். - பாஜக வில் முக்கியப் பங்காற்றிய அவைத்யநாத்தின் மகன் யோகி ஆதித்யநாத் இன்று உத்திரப்பிரதேச முதல்வர். தற்போதைய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் பிரேம்குமார் துமலின் மகன். கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். கர்நாடக முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எஸ்.ஆர்.பொம்மையின் மகன்? விஜயராஜே சிந்தியாவின் மகள் வசந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தான் முதல்வராக இருந்தார். வசந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் - பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். மாதவராவ் சிந்தியாவின் புதல்வர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை காங்கிரசிலிருந்து இழுத்து இன்று பாஜக வின் மத்திய அமைச்சராக ஆக்கியிருக்கிறார்கள். மேனகா காந்தி - வருண் காந்தி - இருவரும் பாஜகவின் எம்.பி.க்கள். காங்கிரசிலிருந்து சென்று, இன்று பாண்டிச்சேரியில் பாஜக எம்.எல்.ஏக்களாகியிருக்கிறார்கள் - தந்தை ஜான்குமாரும் மகன் ரிச்சர்டும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பாஜகவின் உத்திரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டின் செயலாளராக இருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன்தான் தற்போதைய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர்சிங் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். யஸ்வந்த் சின்கா அவரின் புதல்வர் ஜெயந்த் சின்கா இருவரும் பாஜகவின் மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்கள். சதீஷ்கார் முதல்வராக ராமன்சிங் இருந்தபோது அவரது மகன் அபிஷேக்சிங் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். மகாராஷ்டிராவில், முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் பாராளுமன்ற உறுப்பினராகவும், கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தனர். இது பா.ஜ.கவின் குடும்ப அரசியலுக்கு சாம்பிள்தான், இந்த நாட்டுக்கு ஆபத்தானது குடும்ப அரசியல் அல்ல. பிரித்தாளும் அரசியல். மத ரீதியாக, சாதி ரீதியாக, வட்டார ரீதியாக, கட்சி ரீதியாக பிளவுபடுத்தி அதன் மூலமாக குளிர்காடீநுவது தான் ஆபத்தானது.
Rate this:
Cancel
RandharGuy - Kolkatta,இந்தியா
27-நவ-202123:02:42 IST Report Abuse
RandharGuy பா.ஜ.க.வின் வாரிசு அரசியல் சந்தி சிரிக்கும்போது - நீங்கள் வாரிசு அரசியல்பற்றிப் பேசியது, “ஊசியைப் பார்த்து சல்லடை, உன் வாயில் ஒரு ஓட்டை” என்று கூறியதுபோல் இல்லையா?கருநாடகா வில் பாரதிய ஜனதா ஆட்சியில் எடியூரப்பா முதலமைச்சர், அவரது மூத்த மகன் ராகவேந்திரா நாடாளுமன்ற உறுப்பினர், இளைய மகன் கருநாடக மாநில பா.ஜ.க.வின் பொதுச்செயலாதெற்கிலும் ஒரே ஒரு மாநிலத்தில்தான் பாரதிய ஜனதா ஆட்சி அங்கேதான் இப்படி வாரிசு அரசியல்ளர். இன்றைய கருநாடக முதல்வர் பஸ்வராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் பொம்மையின் மகன் அல்லவா? சரி தெற்கு அரசியலை விடுங்கள். வட இந்தியாவில் என்ன நிலை? பட்டியலிடப் பட்டிருக்கும் இவர்களெல்லாம் யார்? விளக்குவார்களா? நாடாளுமன்ற மக்களவையில் பா.ஜ.க. உறுப்பினர்களாக விளங்கும் அனுராக் தாகூர், துஷ்யந்சிங், பூனம் மகஜன், பிரிதம் முண்டே, பிரவேஷ் சாகிப் சிங் வர்மா, பி.ஒடீநு. ராகவேந்திரா இவர்களெல்லாம் யார்? தேசியத் தலைவரும், தமிழக ஒற்றை ஓட்டுத் தலைவரும் விளங்கிக் கொள்ள விளக்கமாகத் தருகிறோம். அனுராக் தாகூர் (இமாச்சலப்பிரதேசமுன்னாள் முதல்வர் மகன்), துஷ்யந்சிங் (ராஜஸ்தான் முன்னாள் முதல்வரின் மகன்), பி.ஒடீநு.ராகவேந்திரா (கருநாடகத்தின் முதல்வர்எடியூரப்பாவின் மகன்), ராஜ்பீர்சிங் (முன்னாள் உ.பி.முதல்வர் கல்யாண்சிங் மகன்), பிரவேஷ் சாகிப் சிங் வர்மா (முன்னாள் டெல்லி முதல்வரின் மகன்), சங்கமித்ரா மயூர்யா (உ.பி. யின் அமைச்சர் சுவாமி பிரசாத் மயூராவின் மகள்), பூனம் மகஜன் (ஒன்றியத்தின் மறைந்த அமைச்சர் பிரமோத் மகஜன் மகள்), பிரிதம் முண்டே (ஒன்றிய அமைச்சராக இருந்து மறைந்த அமைச்சர் கோபிநாத் முண்டே மகள்), மேனகா காந்தி, அவரது மகன் வருண்காந்தி இருவருமே நாடாளு மன்ற உறுப்பினர்கள். இப்படி பி.ஜே.பி.யில் உள்ள அரசியல் வாரிசுகள் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இது மட்டுமல்ல ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சர் கோபிநாத் முண்டேயின்ஒரு மகள் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், இன்னொரு மகள் அவரது மாநிலத்தின் அமைச்சராகவும் இருந்துள்ளார். இன்றைய தினம் ஒன்றிய அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் அவர்களின் மகன்பங்கஜ்சிங் உ.பி.யில் சட்டமன்ற உறுப்பினர். ஏன்? பியூஸ்கோயல் பி.ஜே.பி.யின் பொருளாளர் வேத்பிரகாஷ் கோயல் மகன்தானே பியூஸ் கோயல் தாயார் மூன்று முறைசட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இப்படி, இன்னும் ஒரு நீளமான பட்டியலே இருக்கிறது இதெல்லாம் தெரியாது ஏதோ ஒரு அரிய பெரிய கண்டுபிடிப்பை தமிடிநநாட்டில் கண்டுபிடித்தது போல பேசியிருக்கிறார்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-நவ-202117:19:33 IST Report Abuse
sankaseshan காங்கிரஸ் காலம் முழுவதும் முடியவில்லை இன்னும் மூச்சு இருக்கு அதையும் குழி தோண்டி அமுக்கி உள்ளே தள்ளனும் இல்லாவிட்டால் திமிரு அதிகமாகி விடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X