புதிய கோவிட் வைரஸ் ; தென் ஆப்ரிக்க பயணிகளை தனிமைப்படுத்த உத்தரவு

Updated : நவ 27, 2021 | Added : நவ 27, 2021 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: புதிதாக உலகை அச்சுறுத்தி வரும் தென் ஆப்ரிக்காவில் உருவான 'ஒமிக்ரான்' புதிய வகை வைரஸ் பாதிப்புடன் யாரும் வந்துள்ளனரா என மும்பை விமான நிலையத்தில் தனிமைப்படுத்தி பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை விட மிகவும் மோசமானது' என,

மும்பை: புதிதாக உலகை அச்சுறுத்தி வரும் தென் ஆப்ரிக்காவில் உருவான 'ஒமிக்ரான்' புதிய வகை வைரஸ் பாதிப்புடன் யாரும் வந்துள்ளனரா என மும்பை விமான நிலையத்தில் தனிமைப்படுத்தி பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவருக்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.



latest tamil news


தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை விட மிகவும் மோசமானது' என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு வகை வைரஸ் திடீரென பாதிப்பு, 10 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு பி.1.1.529 என்ற புதிய கொரோனா வைரஸ் வகை தான் காரணம் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் வகைக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டாமல் இருந்தது.


இந்நிலையில் நேற்று இந்த வகை வைரசிற்கு ''ஒமிக்ரான்'' என பெயர் சூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸ், தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் வேகமாக பரவக் கூடியது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதை 'கவலைக்குரிய வைரஸ் வகை' என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.



latest tamil news


இந்நிலையில் தென்ஆப்ரிக்காவில் இருந்து மும்பை வரும் அனைத்து பயணிகளையும் சோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளனர்.



ராகுல் வேண்டுகோள்


இது தொடர்பாக காங்., எம்.பி., ராகுல் கூறியிருப்பதாவது: இந்த புதிய வைரஸ் மிக கொடூரமானது என தெரிய வருகிறது. எனவே மத்திய அரசு கூடுதல் புதிய வைரஸ் மத்திய அரசு விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Balaji - Chennai,இந்தியா
27-நவ-202122:14:30 IST Report Abuse
Balaji கவலைக்குரிய என்கிற பிரயோகத்தின் பொருள் என்ன? டெல்டா வந்த காலத்திலிருந்தே கொரோனா தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்றே கூறி வரும் இவர்கள் பின் எதற்கு தடுப்பூசி கட்டாயம் என்று கூறுகிறார்கள்.. அப்படி என்ன இந்த ஓமிகிராநில் விசேஷம்? அதை ஏன் தெளிவாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள்?
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
27-நவ-202115:19:05 IST Report Abuse
Svs Yaadum oore மீண்டும் பீதியை கிளப்பறாங்க . இப்பதான் கொஞ்சம் மக்களுக்கு விடிவு காலம் வருவதுபோல் தெரிந்து பலர் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிலைமை. இப்ப மறுபடியும் புதிய ''ஒமிக்ரான்'' வைரஸ் என்று பெயர் வைத்து , தடுப்பூசிக்கு கட்டுப்படாமல் வேகமாக பரவக் கூடியது , 'கவலைக்குரிய வைரஸ் வகை' என்று இவனுங்களே புரளி . இதில் காங்கிரஸ் பப்பு புதிய வைரஸ் மிக கொடூரமானது என்று அறிவிப்பாம் . இவனுங்களுக்கு நல்ல எண்ணமே கொஞ்சம் கூட கிடையாது . இந்த அல்லோபதி மருந்து கம்பெனிக்காரன் புதுசு புதுசா பெயர் வைத்து சம்பாதிக்க வழி . சித்த , ஆயுர்வேதம் இந்த பிரச்சனை கிடையாது . நல்ல பலனும் செலவில்லாமல் சித்த மருத்துவத்தில் பலர் பிழைத்தார்கள் . சென்னையில் செலவில்லாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் மீண்டது ஆயுர்வேதம்தான் . அதையும் இந்த விடியல் அரசு அவர்கள் சம்பாதிக்க ஊத்தி முடியது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X