பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே தொடர் கனமழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் அழுகும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெண்ணாடம் பகுதியில் பெய்து வரும் மழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் மூழ்கின. பெண்ணாடம் அடுத்த செம்பேரி கிராமத்தில்
சவுந்திரசோழபுரம் செல்லும் சாலையோர பகுதியில் சாகுபடி செய்துள்ள 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் அழுகி, மகசூல் பாதிக்கும் நிலை உள்ளது. விவசாயிகள் கூறுகையில், 'விளை நிலங்களையொட்டி உள்ள வடிகால் வாய்க்கால் கடந்தாண்டு துார் வாரப்பட்டது. ஆனால், பராமரப்பின்றி வடிகால் வாய்க்கால் துார்ந்துள்ளன. இதனால் தற்போது பெய்து வரும் தொடர் கனமழைக்கு நெல், கத்தரி, வெண்டை, சாமந்தி பூ, வாழை உள்ளிட்ட பயிர்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கான்கிரீட் வடிகால் வாய்க்கால் அமைத்தால் மட்டுமே விளைநிலங்களில் உள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கி, அழுகுவதை தடுக்க முடியும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE