திருநகர் : மதுரை மாநகராட்சியின் பழைய 98வது வார்டு தற்போதைய 94வது வார்டு திருநகர். இப்பகுதியில் சேதமடைந்த மெயின் ரோடுகள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் மக்கள் அவதியுறுகின்றனர்.
திருநகர் 1 முதல் 8 பஸ் ஸ்டாப் பகுதிகள், மந்தித்தோப்பு, ஈஸ்வரி நகர், தணிகை நகர், மாணிக்கம் நகர், ஜோசப் நகர், சீனிவாசா நகர், திருமுருகன் காலனி, மகாலட்சுமி நெசவாளர் காலனியை உள்ளடக்கிய இந்த வார்டில் கழிவு நீர் கால்வாய்கள் பல இடங்களில் சேதமடைந்து உள்ளன.
இவை சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. கால்வாய்க்குள் பல இடங்களில் பிளாஸ்டிக்கழிவுகள் குவிந்து கிடப்பதால் அடைப்பு ஏற்படுகிறது. கழிவுநீர் அப்பகுதி கண்மாயில் கலந்து நிலத்தடி நீரை பாதிக்கிறது.மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், 'பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றியபிறகுதான் நிலைமை சரியாகும்' என்கின்றனர்.கோபிநாத், மகாலட்சுமி காலனி: இக்காலனி பாரதியார் பூங்காவில் பால்வாடி கட்டடம் முன் மழைநீர் தேங்கி நிற்கிறது.
அருகில் உள்ள ரேஷன் கடை கட்டடம் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. தெருவிளக்குகள்சரியாக எரியாததால் வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர். பல இடங்களில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது.பாலாஜி, சீனிவாசா நகர்: அ.தி.மு.க., ஆட்சியில் அமைத்த ரோடுகள் பல இடங்களில் மிகமோசமாக சேதமடைந்துவிட்டது. மெயின் ரோடுகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE