புதுடில்லி : ''அண்டை நாடான வங்கதேசத்துடனான நட்பு உருவாகி 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
'மைத்ரி திவஸ்'
கடந்த 1971 டிச., 6ல், வங்கதேசத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்தது. தனி நாடு கேட்டு நடந்த போரில் வங்கதேசத்துக்கு உதவியதுடன், அதை தனி நாடாக இந்தியா அங்கீகரித்தது. இரு தரப்பு நட்பு உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை, 'மைத்ரி திவஸ்' எனப்படும் நட்பு திருவிழாவாக இரு நாட்டிலும் கொண்டாடுகின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் வங்கதேசத்தில் மைத்ரி திவஸ் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் நம் நட்பு வலுப்பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நினைத்து பார்க்கிறேன்.இரு தரப்பு உறவுவங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இணைந்து, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()
|
50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி
''நாடு முழுதும் 127.61 கோடி 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு தகுதியுள்ளோரில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்,'' என, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். அதைக் குறிப்பிட்டு, 'தடுப்பூசி இயக்கத்தில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளோம். அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும்' என, பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE