புதுடில்லி:கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது:
ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.இதன் வாயிலாக அடுத்த மூன்றாண்டுகளில் 155.75 லட்சம் வீடுகள் 2.17 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
இதில் மத்திய அரசு 1 லட்சத்து 25 ஆயிரத்து 106 கோடி ரூபாய் செலுத்தும். பாக்கித் தொகையை அந்தந்த மாநில அரசுகள் தர வேண்டும்.இந்த திட்டத்தில் மொத்தம் 2.95 கோடி வீடுகள் கட்டப்படுகின்றன. கடந்த நவம்பர் வரை 1.65 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.இதன் வாயிலாக அடுத்த மூன்றாண்டுகளில் 155.75 லட்சம் வீடுகள் 2.17 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
இதில் மத்திய அரசு 1 லட்சத்து 25 ஆயிரத்து 106 கோடி ரூபாய் செலுத்தும். பாக்கித் தொகையை அந்தந்த மாநில அரசுகள் தர வேண்டும்.இந்த திட்டத்தில் மொத்தம் 2.95 கோடி வீடுகள் கட்டப்படுகின்றன. கடந்த நவம்பர் வரை 1.65 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement