குன்னுார் : நீலகிரி மாவட்டம், வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லுாரியில், 40 நாடுகளை சேர்ந்த, 430 ராணுவ பயிற்சி அதிகாரிகள் பயிற்சி பெற்று, ராணுவ உயரிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

குன்னுார் நஞ்சப்பா சத்திரம் பகுதியில், நேற்று ஹெலிகாப்டர் விபத்தில், பலியான முப்படை தளபதி பிபின் ராவத் பல்வேறு உயரிய பதவிகளை வகித்தவர். அதற்கான பெருமை இந்த கல்லுாரிக்கு உள்ளது. அவரும் இந்த கல்லுாரியில் பயிற்சி பெற்ற மாணவர்.இந்நிலையில், தான் படித்த கல்லுாரியில் நடக்கும் முக்கிய கூட்டத்தில் பங்கேற்கவந்தபோது, அவர் விபத்தில் பலியானார்.

இந்த சம்பவம் ராணுவ பயிற்சி கல்லுாரி மாணவர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.குன்னுாரில் பயின்று, நம் ராணுவ படைக்கு தலைமை வகித்து, பின்னர் முப்படைகளின் தளபதியாக தலைநிமிர்ந்த அந்த சிங்கம், தான் ராணுவ தந்திரங்கள் பயின்ற மண்ணிலேயே, கம்பீரமாக தலை சாய்ந்தது, பெரும் வரலாற்று பதிவாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE