ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீசார் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரின் வடக்கு பகுதியான பந்திப்போரா மாவட்டம், குல்ஷான் சவுக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
![]()
|
இதில் இரு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முகம்மது சுல்தான், பையாஸ் அகமது என்ற இரண்டு போலீசார் வீரமரணம் அடைந்தனர். இரண்டு போலீசார் காயமடைந்தனர்.தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement