ஜெயலலிதா வீட்டின் சாவி தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (31) | |
Advertisement
சென்னை : சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தின் சாவியை, அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக்கிடம், சென்னை கலெக்டர் விஜயதாரணி நேற்று ஒப்படைத்தார்.உடன் கணவருடன் சென்று வீட்டை திறந்து பார்த்த தீபா, 'வீட்டில் எதுவுமே இல்லை; காலியாக உள்ளது' என்றார்.சென்னை போயஸ் கார்டனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, 'வேதா இல்லம்' உள்ளது.இதை நினைவு

சென்னை : சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தின் சாவியை, அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக்கிடம், சென்னை கலெக்டர் விஜயதாரணி நேற்று ஒப்படைத்தார்.



latest tamil news


உடன் கணவருடன் சென்று வீட்டை திறந்து பார்த்த தீபா, 'வீட்டில் எதுவுமே இல்லை; காலியாக உள்ளது' என்றார்.சென்னை போயஸ் கார்டனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, 'வேதா இல்லம்' உள்ளது.



இதை நினைவு இல்லமாக மாற்ற, அ.தி.மு.க., அரசு முடிவு செய்து அவசர சட்டம் பிறப்பித்தது. அதன்பின், வேதா இல்லம் கையகப்படுத்தப்பட்டது. அதற்கான இழப்பீடு தொகை சென்னை சிவில் நீதிமன்றத்தில், 'டிபாசிட்' செய்யப்பட்டது. ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசுகளான, அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


latest tamil news


வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவித்ததுடன், மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, வேதா இல்லத்தின் சாவியை, தங்களிடம் ஒப்படைக்கக் கோரி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தீபா, தீபக் ஆகியோர், கடந்த 27ம் தேதி தனித்தனியாக மனு அளித்தனர்.



இது குறித்து, சென்னை கலெக்டர் விஜயராணி, அரசிடம் ஆலோசித்து நேற்று காலை வேதா இல்ல சாவியை, தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இருவரும் சாவியுடன் ஜெயலலிதா நினைவிடம் சென்று வணங்கினர். பின், போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் சென்றனர். தீபாவின் கணவர் மாதவனும் உடன் சென்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (31)

Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-டிச-202120:18:39 IST Report Abuse
Swaminathan Chandramouli தீபா அம்மையார் மாதவனிடம் சாக்கிரதையாக இருக்கவேண்டும் அந்த வீட்டுப்பத்திரத்தை தன் பெயருக்கு மாற்றி எழுதி விடப் போகிறான்
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
11-டிச-202119:49:29 IST Report Abuse
vijay //...கலெக்டர் விஜயராணி, அரசிடம் ஆலோசித்து...// வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது தீர்ப்பு கொடுத்தாச்சுன்னா கொடுக்க வேண்டியதுதானே
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai, Thamizhagam.,இந்தியா
11-டிச-202119:46:40 IST Report Abuse
Vijay D Ratnam நோகாமல் நொங்கு திண்ணும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் விரைவில் சின்னம்மா கைக்கு போய்விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X