'லவ் ஜிகாத்' என குற்றச்சாட்டு: காதலில் ஏமாந்த இளம்பெண் தற்கொலை
'லவ் ஜிகாத்' என குற்றச்சாட்டு: காதலில் ஏமாந்த இளம்பெண் தற்கொலை

'லவ் ஜிகாத்' என குற்றச்சாட்டு: காதலில் ஏமாந்த இளம்பெண் தற்கொலை

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (39) | |
Advertisement
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காதலித்து ஏமாற்றப்பட்ட 25 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது கடிதத்தில், 'இது லவ் ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளார்.ராமநாதபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண், இன்ஜினியரிங் படித்தவர். இவரது பக்கத்து தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர், அன்வர் மகன் ஷேக்முகமது, 30. இவர் 2018ல் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.
'லவ் ஜிகாத்' என குற்றச்சாட்டு: காதலில் ஏமாந்த இளம்பெண் தற்கொலை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காதலித்து ஏமாற்றப்பட்ட 25 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது கடிதத்தில், 'இது லவ் ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளார்.



ராமநாதபுரத்தைச் சேர்ந்த 25 வயது பெண், இன்ஜினியரிங் படித்தவர். இவரது பக்கத்து தெருவில் வாடகை வீட்டில் வசித்தவர், அன்வர் மகன் ஷேக்முகமது, 30. இவர் 2018ல் ராமநாதபுரம் தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அப்போது, அப்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். ஷேக் முகமது அம்மாவும் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணிடம் உறவு கொண்டுள்ளார்.



இந்நிலையில், 2019ல் ஷேக் முகமது குடும்பம் திருச்சி சென்றது. அதன்பின், திருமணம் செய்ய மறுத்ததோடு அலைபேசி எண்ணையும் 'பிளாக்' செய்துள்ளார். இதனால், மனமுடைந்த பெண் நேற்று முன்தினம்(டிச.,09) துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


latest tamil news


அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தில், மோசடியாக தன்னை திட்டமிட்டு காதலிப்பதாக கூறி, பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாகவும், இதேபோல் பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், 'இது லவ் ஜிகாத்' என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் தற்கொலைக்கு காரணமான ஷேக் முகமது, அவரது தந்தை அன்வர், தாய், மாமா ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.



கேணிக்கரை போலீசார், நான்கு பேர் மீதும் தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.ஷேக் முகமதுவை கைது செய்ய, தனிப்படை போலீசார் திருச்சி சென்றுள்ளனர்.



ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலர் ராமமூர்த்தி அறிக்கையில், 'அப்பாவி பெண் பொறியாளர் தற்கொலைக்கு காரணமான ஷேக்முகமதுவை கைது செய்து, பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு பதிய வேண்டும். 'தற்கொலை செய்த பெண் லவ் ஜிகாத் பற்றி குறிப்பிட்டுள்ளதால், முழுமையாக விசாரணை செய்ய வேண்டும்.'போலீசார் மெத்தனம் காட்டினால், தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (39)

Sadiq Batcha - Tiruchi,இந்தியா
15-டிச-202100:30:18 IST Report Abuse
Sadiq Batcha எச்சி துப்பி கொடுக்கும் பிரியாணியும் கஞ்சியும் போன்ற செய்திகள் மிகவும் மோசமான உண்மை, லவ் ஜிகாத்தும் உண்மையே
Rate this:
Cancel
12-டிச-202107:34:02 IST Report Abuse
அப்புசாமி தப்பையெல்லாம் தன் மேலே வெச்சிக்கிட்டு ஏமாத்துனவன் மேலே பழி போடுவதா? இந்து மதத்திலே ஆளுங்களே கிடைக்கலியா? நட்போட நிறுத்திக்கோங்க.. புரட்சி செய்வதா நினைச்சுக்கிட்டு இது மாதிரி செய்யாதீங்க.
Rate this:
Cancel
Jana - Chennai,இந்தியா
11-டிச-202120:15:57 IST Report Abuse
Jana காதலுக்கு.. காமத்துக்கு எதுடா. மதம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X