வானை அளந்த பாரதி: இன்று (டிச. 11) பிறந்த நாள்

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிச., 11 ல் சின்னச்சாமி ஐயர் - லட்சுமி அம்மையார் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் மகாகவி பாரதியார். பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சுப்ரமணி. ஆனால் 11ஆவது வயதில் கவிபாடும் ஆற்றலினால், எட்டயபுரம் மன்னரால் பாரதி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அன்று முதல் சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பட்டார்.பாரதியார் காசிக்கு சென்று தங்கியிருந்த
பாரதியார், பாரதி, bharathiyar, bharathi,

துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிச., 11 ல் சின்னச்சாமி ஐயர் - லட்சுமி அம்மையார் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் மகாகவி பாரதியார். பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சுப்ரமணி. ஆனால் 11ஆவது வயதில் கவிபாடும் ஆற்றலினால், எட்டயபுரம் மன்னரால் பாரதி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அன்று முதல் சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பட்டார்.



பாரதியார் காசிக்கு சென்று தங்கியிருந்த காலங்களில் சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளை கற்றார். ஆங்கிலம், வங்காளம் மொழிகளிலும் புலமை பெற்றார். அனைத்து மொழிகளையும் அறிந்ததால் தான் அவரால் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாட முடிந்தது.



'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்


வள்ளுவனைப்போல், இளங்கோவைப்


போல்


பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை' என்றும் பாடினார்.



இவரின் தமிழ்ப்பற்று, தேசியப்பற்று, தெய்வீகப்பற்று ஆகியவற்றை விட தீர்க்கதரிசனம் மேலோங்கி நின்றது.




ஆனந்த சுதந்திரம்


வானொலி, 'டிவி' இல்லாத அக்காலத்தில் இவர் பாடிய கவிதைதான்


'காசிதனில் புலவர் பேசும் உரை தான்


காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்' என்பதாகும்.



சுதந்திரம் கிடைப்பதற்கு முன் 1900 களில் இவர் பாடிய பாடல்

'ஆடுவோமே பள்ளு பாடுவோமே


ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்பதாகும்.



இவர் 1912 ல் பகவத்கீதையை தமிழில் மொழி பெயர்த்தார். கீதையின் 10வது அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டி உபதேசம் செய்த போது 24, 26, 35வது ஸ்லோகங்களில் மரங்களில் தான் அரசமரமாகவும், நீர்த்தேக்கங்களில் தான் சமுத்திரமாகவும், காலங்களில் தான் மலர்கள் நிறைந்த வசந்த காலமாக இருப்பதாகவும் கூறுகிறார்.


அதை அடியொற்றி பாரதியார்


'காக்கை குருவி எங்கள் ஜாதி


பெருங்கடலும் நீள் மலையும்


எங்கள் கூட்டம்' என்று பாடினார்.




வானை அளப்போம்


வானவியலிலும் தன் தீர்க்கதரிசனத்தைக் காட்டினார் முண்டாசுக்கவிஞர் பாரதி.நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதிக்கும் முன்னரே அதுகுறித்து பாடியுள்ளார்.


'வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்


சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்' என்பது அவரது கவிதை வரிகள்.



கல்வி கற்பதற்கு பசி, ஏழ்மை காரணமாக இருக்க கூடாது என்பதற்காக, நமது ஆட்சியாளர்கள் கையாண்ட மதிய உணவுத்திட்டம், சத்துணவுத் திட்டம் ஆகியவை குறித்து பாரதி அந்த காலத்திலேயே முன்கூட்டியே அறிந்திருப்பார் போலும்.


'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்


ஆலயம் பதினாயிரம் கட்டல்


அன்ன யாவினும் புண்ணியம் கோடி


ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாடல் எழுதி நம்மைப் பரவசப்படுத்தினார்.



தன் 39-ம் வயதில் உயிர் நீத்த இந்தத் தமிழ்க் கவி பலகாலம் உயிரோடு இருந்திருந்தால் என்னென்ன தீர்க்கதரிசனம் கண்டிருப்பாரோ என்ற எண்ணம் நம்மை வியக்க வைக்கிறது.



latest tamil news

-டாக்டர் பி.எஸ்.சண்முகம்


முடநீக்கியல் துறை


ஓய்வு பேராசிரியர், மதுரை


drpssmdu@gmail.com

Advertisement




வாசகர் கருத்து (14)

மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
11-டிச-202123:58:56 IST Report Abuse
மலரின் மகள் அருமையான கட்டுரை. நிழற்பட குழு, ஆசிரியர் மற்றும் மலருக்கு மனமார்ந்த நன்றியை தெவிக்கிறோம். பள்ளி குழந்தைகளை இதை படிக்க கொடுக்கவேண்டும். இதை பிரிண்ட் செய்து குழந்தைகள் அனைவரையும் படிக்க சொல்லலாம். இதே பாணியில் அவர்கள் எழுதி பழகலாம். தமிழில் கட்டுரைகளை எழுதும் சிறப்பாற்றம் நிச்சயம் பெருகும். ஆசிரியருக்கு பாராட்டுதல்களை தெரிவிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. பாரதியை இவ்வளவு அழகாக இதயவரையில் யாரும் காட்டி இருக்க மாட்டார்கள். உங்களின் நிழற்பட குழுவினர் முயற்சி செய்து பல்வேறு வகையில் வரைந்து அதில் சிறப்பனையொன்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பாரதியின் இளமை காலம் இருபதுகளில் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று மனதில் கொணர்ந்து வரைந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. மனதிற்கு மகிழ்ச்சியே. இதற்காக உங்கள் குழுவினரை வாழ்த்துகிறோம், மேலும் மேலும் சிறப்பு பெறுவீர்கள். நிச்சயமாக. பிடித்த கவிகளிலேயே அதிகம் விரும்பும் கவி பாரதியே. சுதந்திரம், கல்வி, தேசப்பற்று, பாரத அன்னையின் மீது கொண்டிருந்த தீராக்காதல், பெண்ணின் விடுதலைக்காக போராடிய தீரம் நம் மனதில் பிரதியை தான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது. பெண்கள் அனைவரையும் பாரத அன்னையாக பாவித்தவர் பாரதி. நதி, மலர், கண்ணுக்கு விரிந்தன அனைத்தையும் பெண்களுக்கு உவமை கூறிய புலவர்கள் மத்தியில், பெண்களை பாரத தாயாக பார்த்தவர் பாரதி மட்டுமே. பெண்கள் சமூகத்தின் பிடியிலும், பாரத அன்னை அந்நியர்களின் சங்கிலியில் கட்டுண்டதை தனது பேனாவால் உடைத்தெறிந்தவன் பாரதி. அவன் புகழ் எல்லாராலும் எல்லா காலத்திலும் நினைவில் இருந்து கொண்டே இருக்கும். வையகம் உள்ளவரையில் அவன் புகழ் நிறைந்திருக்கும்.
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-டிச-202122:27:31 IST Report Abuse
THINAKAREN KARAMANI பாட்டுக்கொரு புலவன் பாரதி - நம் பாரதத் திருநாட்டின் திருமகன் பாரதி - இவரது புகழ் இவ்வையம் இருக்கும்வரை வாழட்டும்.
Rate this:
Cancel
11-டிச-202121:13:52 IST Report Abuse
theruvasagan வள்ளுவர் கம்பன் ஒளவையார் இந்த மகத்தான கவிஞர்கள் வரிசையில் புதுமைக் கவிஞன் பாரதிக்கும் ஒரு இடம் உண்டு. இந்த நால்வரின் படைப்புகள் படித்து பயன் பெறவும் இன்புறவும் மட்டுமல்ல. நாம் எந்த விஷயத்தை பேசினாலும் எழுதினாலும் இவர்கள் வரிகளை மேற்கோள் காட்டாமல் இருக்கவே முடியாது. இவர்கள் காலங்களை வென்ற அமர கவிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X