வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே... நாடி நிற்குது அனேக நன்மையே... உண்மையே....:போராட்டம் முடிந்து ஊர் திரும்பும் விவசாயிகள்!

Updated : டிச 11, 2021 | Added : டிச 11, 2021 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி: ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் போராட்டம் முடிந்து தங்களின் டென்டுகளை காலி செய்து அவரவர் இல்லங்களுக்கு திரும்பி வருகின்றனர். விவசாயிகள் பேரணியாக டில்லியில் இருந்து புறப்பட்டனர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்பினர் வட மாநிலங்களில் போராட்டம் நடத்தினர்.

புதுடில்லி: ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கும் மேலாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் போராட்டம் முடிந்து தங்களின் டென்டுகளை காலி செய்து அவரவர் இல்லங்களுக்கு திரும்பி வருகின்றனர். விவசாயிகள் பேரணியாக டில்லியில் இருந்து புறப்பட்டனர்.




latest tamil news


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு விவசாய அமைப்பினர் வட மாநிலங்களில் போராட்டம் நடத்தினர். உச்சக்கட்டமாக ஜனாதிபதி மாளிகை, பார்லி., என முற்றுகையிட்ட போது பெரும் வன்முறை வெடித்தது. பின்னர் அமைதி போராட்டம் தொடர்ந்தது.



latest tamil news


இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்நிலையில் ஒரு வருடம் 80 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து டில்லி - அரியானா , சிங்கு எல்லை, காசியாபாத் எல்லையில் ஆங்காங்கே போட்டிருந்த டென்ட் களை விவசாயிகள் கலைத்தனர். அத்துடன் பேரணியாக டில்லியில் இருந்து பஞ்சாப், உபி., விவசாயிகள் புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (19)

Sivagiri - chennai,இந்தியா
11-டிச-202123:35:09 IST Report Abuse
Sivagiri மோடிஜியின் ராஜ தந்திரத்தால் - போராட்டத்தை இழு இழு என்று இழுத்து , டில்லியில் வேறு எந்த தேச விரோத போராட்டமும் நடத்த முடியாதபடி - தலைநகரை காத்து நின்ற தோழர்களே , பஞ்சாபி சிங்கங்களே , ... சென்றுவாருங்கள் ... அடுத்து தேவைபடும் பொழுது சொல்லி அனுப்புறோம் .....கண்டிப்பா வந்துடுங்க . . அதுவரை நன்றி ...
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-டிச-202122:12:52 IST Report Abuse
THINAKAREN KARAMANI அன்பு விவசாயிகளே உங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விவசாயத்தைப் பெருக்கி நாட்டை வளமுள்ளதாக்குங்கள். உலகில் நாமும் நமது நாடும் பெருமைப் படும்படி உழைத்து முன்னேறுவோம் விவசாயத்தைச் செழிப்பாக்குவோம்.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
11-டிச-202121:26:12 IST Report Abuse
amuthan சிலர் எழுதும் கருத்துகள் என்ன சொல்ல. வேளாண் சட்டம் மூலம் இடை தரகர்களை ஒழித்து விடலாம். இடை தரகர்களை ஒழிக்க முடியாது. நமது ஊரில் விளையும் வெண்டை காய் உள்ளியை ஊட்டிக்கும், அங்குள்ள கேரட் பீட்ரூட் நம்ம ஊருக்கு கொண்டு வர வியாபாரிகள் தேவை. அவர்களை தரகர் என்று கொச்சை படுத்துகிறோம். இப்போது இருக்கும் வியாபாரிகளை ஒழித்து விட்டால் எளிதாக கார்பரேட் அந்த வேலை செய்ய வந்து விடும். அவ்வளவு தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X