கடந்த 8 ம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். டில்லி கொண்டு செல்லப்பட்ட அவர்களது உடலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, டில்லி காமராஜர் சாலையில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியின் பரார் சதுக்க மயானத்தில், முழு ராணுவ மரியாதையுடன் பீரங்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத் மற்றும் மதுலிகா உடல் தகனம் செய்யப்பட்டது. தங்கள் பெற்றோர் உடல்களுக்கு, மகள்கள் தீ மூட்டினர்.

இதனை தொடர்ந்து அவர்களின் அஸ்தியை, மகள்கள் தாரணி மற்றும் கிருத்திகா பெற்று கொண்டனர். தொடர்ந்து, உத்தர்கண்ட் மாநிலம் ஹரித்வார் சென்றனர். அங்கு, மதச்சடங்குகளை செய்த இருவரும், பின்னர் அஸ்தியை கங்கை நதியில் கரைத்தனர்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE