வாஷிங்டன்:அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக, இந்தியாவில் பிறந்த கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர் கவுதம் ராகவன். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அரசியல் ஆலோசகராகவும்,அதிபரின் அலுவலக உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். அதிபர் அலுவலக இயக்குனராக இருந்த கேத்தி ருசல்லை, 'யூனிசெப்' அமைப்பின் செயல் இயக்குனராக நியமிக்க ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் விருப்பம் தெரிவித்திருந்தார்.
அதை ஜோ பைடன் ஏற்றுக் கொண்டார். இதைஅடுத்து அதிபர் அலுவலக இயக்குனராக, கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.அதிபர் அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு தகுதியுள்ளோரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இவருக்கு கிடைத்துள்ளது.ஓரினச் சேர்க்கையாளரான இவர், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்திலும், முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE