கிராமங்களுக்கு மழை நீர் வாய்க்கால் களமிறங்கினார் 'கால்வாய் மனிதர்'

Updated : டிச 16, 2021 | Added : டிச 15, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
கயா :மலையில் பெய்யும் மழை நீர் தன் கிராமத்துக்கு கிடைக்கும் வகையில், 3 கி.மீ., துாரத்துக்கு தனியாளாக கால்வாய் வெட்டிய, பீஹாரைச் சேர்ந்த 'கால்வாய் மனிதர்' புதிய கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள கயா மாவட்டம் கோத்திலாவா பகுதியைச் சேர்ந்தவர் லாங்கி புய்யன்.
 கிராமங்களுக்கு மழை நீர் வாய்க்கால் களமிறங்கினார் 'கால்வாய் மனிதர்'

கயா :மலையில் பெய்யும் மழை நீர் தன் கிராமத்துக்கு கிடைக்கும் வகையில், 3 கி.மீ., துாரத்துக்கு தனியாளாக கால்வாய் வெட்டிய, பீஹாரைச் சேர்ந்த 'கால்வாய் மனிதர்' புதிய கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.



பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஉள்ளது. இங்குள்ள கயா மாவட்டம் கோத்திலாவா பகுதியைச் சேர்ந்தவர் லாங்கி புய்யன். அருகில் உள்ள மலைப் பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க அழைத்துச் சென்று வந்த அவர், அங்கு பெய்யும் மழை நீர் வேறு பகுதிக்கு செல்வதை பார்த்தார்.அந்த மழை நீரை தன் கிராமத்துக்கு திரும்பும் வகையில், கால்வாய் அமைக்க முடிவு செய்தார்.



கடந்த, 30 ஆண்டுகளாக, தனியாளாக மலையில் இருந்து தன் கிராமத்துக்கு கால்வாயை அவர் அமைத்தார். கடந்தாண்டு இந்தப் பணியை அவர் முடித்தார். தற்போது அவருடைய கிராமத்துக்கு தேவையான தண்ணீர் கிடைத்து வருகிறது.இந்நிலையில், அருகில் உள்ள ஐந்து கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில், மற்றொரு கால்வாயை அமைக்கும் பணியை அவர் துவக்கியுள்ளார்.'போதிய தண்ணீர் கிடைத்தால், அந்த கிராமங்களில் விவசாயம் செழிக்கும். மக்களும் வறுமையில் இருந்து மீள்வர்' என, புய்யன் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

sridhar - Dar Es Salaam ,தான்சானியா
16-டிச-202119:29:40 IST Report Abuse
sridhar மனுஷன்டா
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
16-டிச-202119:04:46 IST Report Abuse
THINAKAREN KARAMANI தளர்ச்சியடையா முயற்சிதனைப் பெருதும் உடைய தங்களைப்போல் ஒருவர் உலகில் இல்லை. 30 ஆண்டுகளாக யாரும் உதவிக்கு வராத பொழுதும் தனியாளாக மலையில் இருந்து தன் கிராமத்துக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்து தன் கிராமத்தைச் செழிப்பாக்கிய உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள், பாராட்டுக்கள், நல்வணக்கங்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
DINAGARAN S - new delhi,இந்தியா
16-டிச-202114:39:52 IST Report Abuse
DINAGARAN S அரசாங்கம் என்ன செய்கிறது. வெட்கக்கேடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X