அமெரிக்கா தன் பழைய குண்டுகளை புதுப்பிக்கத் துவங்கியுள்ளது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் எழுபதாண்டுகால பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன. அதன் பின் இரு தரப்பும் அணு ஆயுத நிறுத்த ஒப்பந்தம் போட்டன.
அமெரிக்கா சில அணுகுண்டுகளை தயார் நிலையில் வைத்திருந்தது. என்றாலும், பழசாகிவிட்ட அவற்றை, புதுப்பிக்காவிட்டால் 'வீணாகிடும்' என வல்லுனர்கள் தெரிவித்தனர். இது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக விவாதம் நடந்தது. அண்மையில் தான் அமெரிக்கா, நவீன விமானங்களில் சுமந்துபோய் போடுவதற்கு ஏற்ப குண்டுகளை மறுசுழற்சி செய்ய முடிவெடுத்தது. கடந்த நவம்பர் 23 அன்று , பி61 ரக குண்டுகள் தயாரிக்கப்பட்டு நிலத்தடிகிடங்கில் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது.
இப்போது மறுவடிவமைப்பு செய்யப்படும் நான்கு ரக அணுகுண்டுகளும் 0.3 கிலோ டன் முதல் 340 கிலோ டன் வரையிலான டி.என்.டி., வெடிப்புத் திறன் கொண்டவை. அலட்டல் இல்லாத அதிபர் ஜோ பைடனின் ஆட்சியில் இப்படி ஒரு அணுகுண்டு ஏற்பாடு நடப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE