ராணிப்பேட்டை: யு டியூப் பார்த்து பிரசவம் பார்த்து குழந்தை இறந்த வழக்கில், அக்கா, தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த நெடுபும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன், 34. மரச்செக்கு எண்ணை வியாபாரம் செய்கிறார். இவர் மனைவி கோமதி, 28. நிறைமாத கர்ப்பிணியான கோமதிக்கு, கடந்த 12 ம் தேதி பிரசவம் ஆகும் என டாக்டர்கள் கூறினர்.ஆனால் அன்றைய தினம் பிரசவம் ஆகவில்லை. கடந்த 18 ம் தேதி மாலை 3:00 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. லோகநாதன் தன் அக்கா கீதா, 45, ஆகியோர் சேர்ந்து யு டியூப் சேனலை பார்த்து கோமதிக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில், ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. கோமதிக்கு ரத்த போக்கு அதிகரித்து கோமா நிலைக்கு சென்றதால் புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புன்னை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மோகன் கொடுத்த புகாரின் பேரில், நெமிலி போலீசார் லோகநாதன், அவரது அக்கா கீதா ஆகியோர் மீது இன்று வழக்கு பதிவு செய்தனர்.இதனால் அவர்கள் தலைமறைவாயினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE