சென்னை -புகாரை பதிவு செய்து சான்றளிக்காதது குறித்து கேள்வி எழுப்பியதற்காக, போலீசாரால் தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.சட்டவிரோதம்துாத்துக்குடி மாவட்டம், அரசூர் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாத் சுரேஷ். இவர் தன் விவசாய நிலத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து, பயிர்களை சேதம் செய்தது தொடர்பாக புகார் அளிக்க, வழக்கறிஞர் பெரியசாமியுடன் தட்டார்மடம் காவல் நிலையம் சென்றார்.அங்கு புகாரை பதிவு செய்து சான்றளிக்காதது குறித்து, வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அவரை, எஸ்.ஐ., சுந்தரம், சிறப்பு எஸ்.ஐ., தேவராஜ், தலைமை காவலர் மார்த்தாண்ட பூபதி உள்ளிட்ட ஐந்து பேர் ஆபாசமாக பேசி தாக்கியதுடன், முதலுதவி வழங்காமல், பொய் வழக்கு பதிந்து சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசார் மீதும், சாத்தான்குளம் டி.எஸ்.பி., மீதும் நடவடிக்கை எடுக்கும்படி, வழக்கறிஞர் பெரியசாமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.ஆதாரம்இந்த புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:காவல் துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். அதை, எஸ்.ஐ.,யிடமிருந்து 2 லட்சம் ரூபாய்; டி.எஸ்.பி.,யிடமிருந்து 1 லட்சம் ரூபாய், மற்ற நான்கு போலீசாரிடமிருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் என வசூலிக்க வேண்டும். ஐந்து போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மூன்று மாதங்களில் டி.ஜி.பி., உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எஸ்.ஐ., சுந்தரத்தை, சட்டம் - ஒழுங்கு பிரிவில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE