புதுடில்லி: '2014 க்கு முன்பு வரை கூட்டமாக சேர்ந்து அடித்து கொல்லுதல் (lynching) என்று ஒன்று நடந்ததாக நாம் கேட்டதே இல்லை' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 29ல் துவங்கிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ளது. கடந்த கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதால் 12 ராஜ்யசபா எம்.பி.,க்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுதும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பார்லியின் இரு அவைகளிலும் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பார்லியின் பெரும்பாலான அலுவல்கள் வீணாகின. தொடர்ந்து அவை ஒத்திவைப்பு நிகழ்வே நடந்து வருகிறது.

அதேபோல், நேற்று (டிச.,20) தேர்தல் சீர்திருத்த மசோதா தாக்கல் செய்தபோதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதுபோன்று பல விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், '2014 க்கு முன்பு வரை கூட்டமாக சேர்ந்து அடித்து கொல்லுதல் (lynching) என்று ஒன்று நடந்ததாக நாம் கேட்டதே இல்லை,' எனத் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE